நரகத்தில் ஒரு பருவகாலம்
- ஆர்தர் ரைம்போ / Arthur Rimbaud
- In stock, ready to ship
- Backordered, shipping soon
கவிஞனொருவன், தனது புலன்கள் அனைத்தையும். பிரம்மாண்டமான, திட்டமிட்ட சீர்குலைவுக்கு உள்ளாக்குவதன் மூலமே தன்னை ஒரு தீர்க்கதரிசியாக (Voyant) மாற்றிக்கொள்கிறான் என்று Letters of the Seer-ல் எழுதும் ரைம்போ, கவிதையின் மூலம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிய முயன்று, அதில் தோல்வியடைந்து, வார்த்தைகளின் எல்லையை உணர்ந்த மௌனத்திற்குள் சென்ற சாட்சியே இந்நூல், தனிமனிதன் ஒருவனின், உச்சகட்ட அகப்போராட்டத்தின் வெளிப்பாடு.
ரைம்போவின் கவிதைகள் இருண்மையானவை. குழப்பமானவை. அதே நேரத்தில் மர்மமான அழகுணர்வும் கொண்டவை. அவருக்கு முன், பிரெஞ்சு கவிதைகள் மரபார்ந்த இலக்கியப் புலமை, இலக்கணம் சார்ந்தே எழுதப்பட்டன. அவர் வார்த்தைகளைக் கையாண்ட விதம், வாசகனை ஒரு வித மாயத்தோற்றத்திற்குள் (Hallucination) தள்ளும் ஆற்றலைக் கொண்டிருந்தது. தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் என்ற சித்த நிலைக்கும், ரைம்போவின் மாயத்தோற்ற கவிதைகளுக்கும் நுட்பமான தொடர்புண்டு.
கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பு, தமிழ் மரபிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கலகக்குரல்களுக்கு புதிய மொழியை உருவாக்கித் தந்து, தமிழ் மனம் பழகியிருக்கும் மரபு அழகியல், சமநிலையை உடைத்து, நவீன தமிழ் கவிதையின் எல்லைகளைத் தேடுகிறது.
- டோனி பிரஸ்லர்
Author: ஆர்தர் ரைம்போ
Translator: கார்த்திகைப் பாண்டியன்
Genre: கவிதை
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789387333086
Award: ஆத்மாநாம் கவிதை விருது
நல்லி குப்புசாமி சிறந்த மொழிபெயர்ப்பு விருது