வள்ளவிளை கடற்கரை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர்
தற்போது தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்துவருகிறார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை நெய்தல் மக்களுக்காகவும், அவர்களின் பண்டைய வரலாறுகளைத் தேடித் தேடிக் கண்டுபிடிப்பதிலும், அதை ஆய்வு செய்வதிலும், மீட்டுருவாக்கம் செய்வதிலும், ஆவணப்படுத்துவதிலும் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்.
துறைவன் என்ற புதினம் வாயிலாக முக்குவா இனக்குழுவின் பண்டைய வரலாற்றை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இனயம் துறைமுகம் என்னும் கட்டுரைத் தொகுப்பை எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உயிர்மை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
2 products
Sale
Quick View

Sale
Quick View
