டைகரிஸ்
Regular price Rs. 550.00 Sale priceRs. 495.00 Save 10%
/

  • ச. பாலமுருகன்
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான  காலம் வரை தன் எல்லைகளை  வரையறுத்துக்  கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.

போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக்  காலத்திலும் அவைகள் ஒன்று  போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக்  காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி  அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள்  ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று கிராமத்திலிருந்து போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள்.  சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்த கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.

Author: ச. பாலமுருகன்

Genre: நாவல்

Language: தமிழ்

Type: Paperback

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.

You may also like


Recently viewed