பா. கண்மணி, பிறந்த வருடம் 1967. தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தில் வளர்ந்தவர். வங்கியில் வேலைபார்த்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். கடந்த 20 வருடங்களாக பெங்களூரில் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். இதுவரை இவரது சிறுகதைகள் சிலவும் கணையாழியில் குறுநாவல் ஒன்றும் பிரசுரமாகி இருக்கின்றன. இடபம் இவரது முதல் நாவல்.
2021ஆம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது பெற்ற நாவல் இடபம்.