யாழன் ஆதி, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசிப்பவர். இயற்பெயர்
இராமபிரபு. பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஏழு கவிதைத் தொகுப்புகளையும் ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்து அவரின் ஆக்கங்கள் பல்வேறு இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமூக அரசியல் பெளத்தம் ஆகிய தளங்களில் பங்கேற்பவராகவும் பங்களிப்பவராகவும் இருப்பது அவரின் இயல்பு.
தம்மபதம் இவரின் முக்கிய ஆக்கங்களில் ஒன்றாக இருப்பது சிறப்பு.