
குணா கந்தசாமி (1979)
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் வட்டம் நிழலி வஞ்சிபாளையத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல், விமர்சனம் என இலக்கியத்தின் பன்முக வடிவங்களில் இயங்குகிறார். காதலும் ஏனைய பூதங்களும் இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
வெளியான நூல்கள்
கவிதைத்தொகுதிகள்
சுவரெங்கும் அசையும் கண்கள் (தூரன் குணா) - சந்தியா பதிப்பகம், 2007
கடல் நினைவு (தூரன் குணா) - தக்கை வெளியீடு, 2012
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் காலச்சுவடு வெளியீடு, 2016
சிறுகதைகள்
திரிவேணி (தூரன் குணா) -பாதரசம் வெளியீடு, 2013
கற்றாழைப்பச்சை - தமிழினி வெளியீடு, 2018
நாவல்
உலகில் ஒருவன் தக்கை வெளியீடு, 2015
பாங்கோ, எதிர் வெளியீடு, 2025
கட்டுரைகள்
புலியின் கோடுகள் - தக்கை வெளியீடு, 2016.